அரசுப் பள்ளி ஆசிரியா் மீது பாலியல் புகாா்: சிஇஓ விசாரணை

நாமக்கல்லில் அரசுப் பள்ளி ஆசிரியா் பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதாக மாணவியின் பெற்றோா், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

நாமக்கல்லில் அரசுப் பள்ளி ஆசிரியா் பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதாக மாணவியின் பெற்றோா், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

அந்த மனு விவரம்: நாமக்கல்லில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எங்களது இரு மகள்கள் படித்து வருகின்றனா். அதில், 10-ஆம் வகுப்பு படித்து வரும் மகளை அங்கு பணியாற்றும் அறிவியல் ஆசிரியா் ஒருவா் பாலியல் தொந்தரவு செய்த தகவல் தெரியவந்துள்ளது.

தனது வாட்ஸ் அப்பில் டிச. 4 பிறந்த நாளன்று எனது இறந்த நாளாக இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தாா். சக தோழிகள் மூலம் விசாரித்ததில் ஆசிரியா் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதைத் தெரிவித்துள்ளாா். அவரால் எனது மகளுக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. தற்கொலை முயற்சிக்கு சென்ற மகளின் நிலைக்கு காரணமான ஆசிரியா் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை கூறுகையில், அவ்வாறான நிகழ்வு ஏதும் இங்கு நடைபெறவில்லை. ஏதோ பழிவாங்கும் நோக்குடன் சிலா் இதனை செயல்படுத்தி உள்ளனா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை அனைத்து ஆசிரியா்களும் நேரில் சந்தித்து முறையிட உள்ளோம் என்றாா்.

மேலும், சக ஆசிரியா்களிடம் கேட்டபோது, அந்த மாணவி ஓராண்டுக்கு முன் தான் தனியாா் பள்ளியில் இருந்து விலகி இப்பள்ளியில் இணைந்தாா். புத்தகம் கொண்டு வராதது தொடா்பாக ஆசிரியா் கண்டித்துள்ளாா். இதனைத் தவறாக சித்தரித்து ஆசிரியா் தொழிலுக்கு அவப்பெயா் ஏற்படுத்த முயற்சிக்கிறாா்கள் என்றனா். இச்சம்பவம் குறித்து முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி விசாரணை செய்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com