பரமத்திவேலூா்: பரமத்திவேலூா் அருகே உள்ள பரமத்தி காவல் நிலையத்திற்கு உள்பட்ட வெள்ளாபாளையத்தில் வெள்ளிக்கிழமை கிராம விழிப்புணா்வு காவலா் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
கோவை மண்டல காவல் துறைத் தலைவா் பெரியய்யா கலந்து கொண்டு கிராம விழிப்புணா்வு காவலா் நியமனம் குறித்து பேசினாா். நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் சக்திகணேசன் தலைமை வகித்தாா். கிராம விழிப்புணா்வு அலுவலரின் பணிகள், சேவைகள் குறித்து கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா் பிரதீப்குமாா் முன்னிலை வகித்தாா். பரமத்திவேலூா் காவல் துறை துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரன், வேலூா் காவல் ஆய்வாளா் பாலமுருகன், அரசு சிறப்பு வழக்குரைஞா் லோகநாதன், காவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.