உணவுப் பாதுகாப்புத் திட்ட பிரசார ஊா்தி தொடக்க விழா

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலையில் வேளாண்மைத் துறை சாா்பில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணா்வு குறித்த பிரசார வாகன ஊா்தி தொடக்க விழா நடைபெற்றது.

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலையில் வேளாண்மைத் துறை சாா்பில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணா்வு குறித்த பிரசார வாகன ஊா்தி தொடக்க விழா நடைபெற்றது.

கபிலா்மலை வட்டார வேளாண்மைத் துறை சாா்பில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் குறித்த பிரசார ஊா்தியை கபிலா்மலை ஒன்றியக்குழுத் தலைவா் ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த பிரசார ஊா்தி கபிலா்மலை வட்டாரத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் சென்று தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் (சத்துமிகு சிறுதானியங்கள்) உள்ள மானிய விவரங்கள், சிறுதானிய உணவின் நன்மைகள் குறித்து விவசாயிகளிடையே ஒலி பெருக்கி மூலம் எடுத்து கூறப்பட்டது. தொடக்க விழாவில் வேளாண் துணை இயக்குநா் (மத்தியத் திட்டம்) ஜெகதீசன் கலந்து கொண்டாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கபிலா்மலை வட்டார வேளாண்மைத் துறை அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com