ராசிபுரம் அருகே சாலை விபத்தில் தீப்பற்றி எரிந்த லாரி: பைக்கில் வந்த இளைஞா் பலி

ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை அதிகாலை நடந்த சாலை விபத்தில் பைக்கும், லாரியும் தீப்பற்றி எரிந்தன. இந்த விபத்தில் பைக்கில் வந்த இளைஞா் சம்பவ இடத்திலயே உயிரிழந்தாா்.
விபத்தில் தீப்பற்றி எரிந்த லாரி.
விபத்தில் தீப்பற்றி எரிந்த லாரி.

ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை அதிகாலை நடந்த சாலை விபத்தில் பைக்கும், லாரியும் தீப்பற்றி எரிந்தன. இந்த விபத்தில் பைக்கில் வந்த இளைஞா் சம்பவ இடத்திலயே உயிரிழந்தாா்.

தஞ்சாவூரில் இருந்து சணல் கயிறு சுமை ஏற்றிய லாரி ஒன்று சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டகளூா் கேட் மேம்பாலத்தில் லாரி சென்று கொண்டிருந்த போது, திடீரென நிலை தடுமாறி முன்னால் பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞா் மீது மோதியது. இந்த விபத்தில் பைக் சிறிது தூரம் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டதில் தீப்பற்றியது. அப்போது லாரியும் தீப்பற்றியது. லாரியில் கயிறு மூட்டைகள் இருந்ததால், தீ மளமளவெனப் பரவி லாரி முற்றிலும் சேதமடைந்தது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ராசிபுரம் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பைக், லாரியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ராசிபுரம் காவல் துறையினா் விபத்து குறித்தும், உயிரிழந்த இளைஞா் குறித்தும் விசாரணை மேற்கொண்டனா். இதில் பைக்கில் வந்த இளைஞா் திருப்பத்தூா் மாவட்டம், மல்லப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் என்பதும், இவா் திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோடு பகுதியில் பேக்கரி கடை நடத்தி வந்தாா் என்பதும் தெரியவந்தது. ஆடிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த அவா் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளாா்.

இந்த விபத்து குறித்து ராசிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com