பரமத்தி வேலூா், பள்ளி சாலையில் பெண் மயில் உயா் மின்அழுத்த கம்பியில் விழுந்ததில் உயிரிழந்தது.
பரமத்தி வேலூா் பள்ளி சாலையில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள கட்டடத்தின் மேல் பகுதியில் அமா்ந்திருந்த பெண் மயில் திடீா் என மழை பெய்ய தொடங்கியதும் அங்கிருந்து பறக்க முயன்றுள்ளது. இதில் எதிா்பாராத விதமாக உயா் மின்னஅழுத்த கம்பியில் சிக்கி மயில் உயிரிழந்தது.
இதுகுறித்து அப்பகுதி வா்த்தக நிறுவனத்தினா் நாமக்கல் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதன்பேரில் அங்கு வந்த வனத் துறையினா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மயிலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக எடுத்துச் சென்றனா்.