பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.
வேலூா், பரமத்தி, பொத்தனூா், பாண்டமங்கலம், எஸ்.வாழவந்தி, ஜேடா்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை மாலை பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழை பெய்தது. வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.