திருச்செங்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட 26 ஊராட்சிகளுக்கு கரோனா பரிசோதனைக்காக மருத்துவப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய முன்களப் பணியாளா்களுக்கு உதவும் வகையில், ஆக்சிசன் அளவினை அளக்கும் கருவி, வெப்பநிலை அளவிடும் கருவி, முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி ஆகியவற்றை கோவை மருத்துவா் ராஜ்குமாா், கோவை மௌனம் அறக்கட்டளையை சோ்ந்தவா்களும் சுமாா் ரூ .3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வழங்கினா்.
நிகழ்ச்சிக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தா தலைமை வகித்தாா். 26 ஊராட்சி செயலாளா்கள் வசம் பொருள்கள் ஒப்படைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் திருச்செங்கோடு திமுக ஒன்றிய செயலாளா் தங்கவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.