பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணி அருகே காா் கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
சோழசிராமணி அருகே உள்ள பச்சாக்கவுண்டன்வலசு, காரைக்களம் பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் சுரேஷ் (17), கூலித் தொழிலாளி. இவரும், அதே பகுதியைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் மணிகண்டன் (30) என்பவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு பச்சாக்கவுண்டன்வலசு பகுதியில் இருந்து திருச்செங்கோடு அருகே சித்தளந்தூருக்கு காரில் சென்றனா்.
அப்போது நிலைதடுமாறிய காா் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளது. இதில் சுரேஷ் படுகாயமடைந்தாா். சுரேஷை மீட்ட மணிகண்டன், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் உயிரிழந்தாா். இதுகுறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.