பரமத்திவேலூரில் ரூ. 4. 57 லட்சம் பறிமுதல்

பரமத்திவேலூா், காவிரி பாலம் அருகே பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி முட்டை லாரியில் கொண்டுவரப்பட்ட ரூ. 4. 57 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
முட்டை லாரியில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் பறக்கும் படையினா்.
முட்டை லாரியில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் பறக்கும் படையினா்.

பரமத்திவேலூா், காவிரி பாலம் அருகே பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி முட்டை லாரியில் கொண்டுவரப்பட்ட ரூ. 4. 57 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பரமத்திவேலூா் தொகுதிக்கு உள்பட்ட பரமத்தி வேலூா், காவேரி பாலம் அருகே தோ்தல் நிலைய கண்காணிப்புக் குழு அலுவலா் வெங்கடேசன், போலீஸாா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக வந்த முட்டை லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் நாமக்கல் மாவட்டம், காரைகுறிச்சி புதூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் நைனாமலை (35) உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 4 லட்சத்து 57 ஆயிரம் கொண்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து பணத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா் பரமத்திவேலூா் உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும் பரமத்திவேலூா் வட்டாட்சியருமான சுந்தரவள்ளியிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com