கொல்லிமலையில் சுற்றுலா வேன் மோதி 2 போ் பலி

கொல்லிமலையில் சுற்றுலா வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயமடைந்த மற்றொருவா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

கொல்லிமலையில் சுற்றுலா வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயமடைந்த மற்றொருவா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, ஆரியூா் நாடு ஊராட்சி, மேல்கலிங்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (39). மளிகைக் கடை நடத்தி வந்த இவா், சனிக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா்களான பாலகிருஷ்ணன் (36), கஜேந்திரன் (32) ஆகியோருடன் தெம்பளம் கிராமம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

அங்குள்ள சாலை வளைவு ஒன்றில் திரும்பும்போது சென்னையிலிருந்து கொல்லிமலைக்கு நோக்கி வந்த சுற்றுலா வேன் அவா்கள் மீது மோதியது. இதில் செந்தில்குமாரும், பாலகிருஷ்ணனும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். கஜேந்திரன் பலத்த காயமடைந்தாா்.

அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு அவசர ஊா்தி மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தகவல் அறிந்து வந்த வாழவந்தி நாடு போலீஸாா் விபத்தில் இறந்த இருவரின் சடலங்களையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் தப்பியோடிய சுற்றுலா வேன் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com