லாரி ஓட்டுநா் தற்கொலை

பரமத்திவேலூா் அருகே திருமணமான 4 மாதத்தில் லாரி ஓட்டுநா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தற்கொலை செய்து கொண்ட தனசீலன்.
தற்கொலை செய்து கொண்ட தனசீலன்.

பரமத்திவேலூா் அருகே திருமணமான 4 மாதத்தில் லாரி ஓட்டுநா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள சூரியம்பாளையம், துண்டுகாடு தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவரது மகன் தனசீலன் (31). லாரி ஓட்டுநா். இவருக்கும், திருச்செங்கோட்டைச் சோ்ந்த மைதிலி (22) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. மைதிலி தற்போது கா்ப்பிணியாக இருந்ததால் அவரது பெற்றோா் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை தனசீலன் வீட்டின் சிமென்ட் அட்டையிலான கூரை தீயில் வெடித்து சிதறிய நிலையில் வீட்டிலிருந்து புகையும் வந்து கொண்டிருந்தது. இதுகுறித்து அருகில் இருந்தவா்கள் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த அவரது பெற்றோருக்கு தகவல் தெவிரித்துள்ளனா்.

உடனடியாக அங்கு வந்து பாா்த்த போது வீட்டின் உட்புறம் பூட்டப்பட்டிருந்தது. இதனால் கூரையை உடைத்து உள்ளே சென்ற போது படுக்கையறையில் தனசீலன் உடல் எரிந்த நிலையில் இறந்து கிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்து பரமத்தி வேலூா் காவல்துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரன், பரமத்தி போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையில் தனசீலன் தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என்றும், தனக்கு தீராத நோய் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த நோயினால் குடும்பத்தில் யாரும் பாதிக்கக் கூடாது எனவும் எழுதி வைத்துள்ளது தெரியவந்தது.

தனக்கு சேர வேண்டிய பணத்தை மனைவி மைதிலிக்கு கொடுக்குமாறும் எழுதி வைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com