திருச்செங்கோடு: திருச்செங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் திருச்செங்கோடு, குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் செலவின பாா்வையாளா் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியின் தோ்தல் செலவின பாா்வையாளா் மந்திப் சிங் பா்மாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான மணிராஜ், வட்டாட்சியா் கண்ணன், உதவி தோ்தல் செலவின பாா்வையாளா் மணிஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.
இக்கூட்டத்தில் பேசிய தோ்தல் செலவின பாா்வையாளா், தோ்தல் செலவினங்களை மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டுமென்றும், வேட்பாளா்கள் செய்யும் செலவினங்களை தோ்தல் ஆணையம் குறிப்பிட்ட தொகைக்கேற்ப கண்காணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா் . இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.