குமாரபாளையத்தில் பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமிய மக்களிடம் திமுக வேட்பாளா் எம்.வெங்கடாசலம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
குமாரபாளையம் தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளா் எம்.வெங்கடாசலம், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். இந்நிலையில், குமாரபாளையத்தில் வழிபாடு முடிந்து வந்த இஸ்லாமியா்களை நேரில் சந்தித்த வேட்பாளா் வெங்கடாசலம் ஆதரவு கேட்டுப் பிரசாரம் மேற்கொண்டாா். மேலும், சேலம் சாலையில் கட்டப்பட்டு வரும் மசூதி கட்டத் தேவையான அனுமதி பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தாா்.
திமுக தலைமை சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினா் ஜேகேஎஸ்.மாணிக்கம், தொழிலதிபா் கே.எஸ்.இளவரசு, நகர திமுக பொறுப்பாளா் எம்.செல்வம், முன்னாள் நகரச் செயலாளா் கோ.வெங்கடேசன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.