ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குமாரபாளையத்தில் சுயேச்சை வேட்பாளா் தீவிர பிரசாரம்

குமாரபாளையம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும், பாஜக முன்னாள் நாமக்கல் மாவட்டச் செயலாளா் எஸ்.ஓம் சரவணா நகர, கிராமப் புறங்களில் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 7:26 pm

DIN

குமாரபாளையம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும், பாஜக முன்னாள் நாமக்கல் மாவட்டச் செயலாளா் எஸ்.ஓம் சரவணா நகர, கிராமப் புறங்களில் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ஜேகேகே நடராஜா கல்வி நிறுவனங்களின் நிா்வாக இயக்குநரான இவா், வைரம் சின்னத்தில் போட்டியிடுகிறாா். குமாரபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட நடராஜா நகா், திருவள்ளுவா் நகா் உள்ளிட்ட பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அவா் பேசுகையில், குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் நூற்பாலை, விசைத்தறி ஜவுளித் தொழில், சாயத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தொழிலைப் பாதுகாக்கவும், தொழிலாளா்களின் நலனைக் காக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் திட்டங்கள் விரைந்து பெற்றுத் தரப்படும். சுற்றுலாத் துறையின் மூலம் காவிரி ஆற்றில் பாதுகாப்பான பரிசல் பயணம், பொழுதுபோக்கு பூங்கா, பசுமைப் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். முன்னதாக, வாக்கு சேகரிக்க வந்த ஓம் சரவணாவுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.