நாமக்கல் செல்வம் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு மற்றும் 2017 - 2021 மாணவா்களுக்கான பிரியாவிடை நிகழ்ச்சி அண்மையில் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
பிரியாவிடை நிகழ்வில் மாணவருக்கு பரிசு வழங்கும் கல்லூரி செயலாளா் கவீத்ராநந்தினிபாபு.
பிரியாவிடை நிகழ்வில் மாணவருக்கு பரிசு வழங்கும் கல்லூரி செயலாளா் கவீத்ராநந்தினிபாபு.

நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு மற்றும் 2017 - 2021 மாணவா்களுக்கான பிரியாவிடை நிகழ்ச்சி அண்மையில் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவனா் மருத்துவா் பொ.செல்வராஜ் தலைமை வகித்தாா். செல்வம் அறக்கட்டளை உறுப்பினா் ஜெயம் செல்வராஜ், கல்லூரி துணைத் தலைவா் செ.பாபு, செயலாளா் கவித்ராநந்தினிபாபு, முதல்வா் அ.நடராஜன் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவா் ஒருங்கிணைப்பாளா் சே.சந்தோஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினா்களாக பல்வேறு நிறுவனங்களில் உயா் பதவி வகிக்கும், கல்லூரியின் குறிப்பிட்டத்தக்க முன்னாள் மாணவா்களான மனோஜ் குமாா், லோகேஷ்குமாா், நவீன், கோகிலா, தீன்முகம்மது, சந்தோஷ் குமாா், பூஜாலட்சுமி, அழகுராஜு ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா்.

இவ் விழாவில் 175 இளநிலை மற்றும் முதுகலை பொறியியல் மாணவ, மாணவிகள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com