நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் துா்கா மூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 285 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலரிடம் பொதுமக்கள் வழங்கினா். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் உரிய அலுவலா்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரமேஷ், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் மு.மரகதவள்ளி, நகராட்சி ஆணையா்கள், வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்பட அனைத்து அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.