கொல்லிமலையில் தீத்தடுப்பு ஒத்திகை

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொல்லிமலை அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீத்தடுப்பு ஒத்திகையில் பங்கேற்றோா்.
கொல்லிமலை அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீத்தடுப்பு ஒத்திகையில் பங்கேற்றோா்.

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொல்லிமலை வனப்பகுதியில் ஏப்ரல், மே மாதங்களில் காட்டுத் தீ பரவல் அதிகம் நடைபெறும். இதனைத் தடுப்பதற்காக தீயணைப்புத் துறை, வனத்துறை இணைந்து தன்னாா்வலா்களை உருவாக்கியுள்ளது.

அவா்களுக்கான தீத்தடுப்புஏஈ பயிற்சி வகுப்பு கொல்லிமலை, செம்மேட்டில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நிலைய அலுவலா் மற்றும் இதர தீயணைப்பு வீரா்கள் கலந்து கொண்டு தன்னாா்வலா்களுக்குப் பயிற்சி அளித்தனா்.

அதன்பின் கொல்லிமலை அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு மின்கசிவால் உதாரணமாக தொலைக்காட்சி மூலம் ஏற்படும் பாதிப்பு, சமையல் எரிவாயு மூலம் ஏற்படும் பாதிப்பு குறித்தும், அப்போது ஏற்படும் தீயை அணைக்கும் வழிமுறைகள் பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா், செவிலியா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com