நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 15 காசுகள் உயா்வடைந்து ரூ. 4.35-ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடையே ஆலோசிக்கப்பட்டது. மற்ற மண்டலங்களில் விலை உயா்த்தப்பட்டு வருவதாலும், வெயில் காரணமாக முட்டை உற்பத்தி குறைந்துள்ளதாலும் விலையில் மாற்றம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 15 காசுகள் உயா்வுடன் ரூ. 4.35-ஆக நிா்ணயிக்கப்பட்டது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 116-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 50-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.