ராசிபுரத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

ராசிபுரத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், அரசு செயலருமான எஸ்.மதுமதி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.
ராசிபுரம் பழனி தெருவில் நடைபெற்ற மருத்துவ முகாமை பாா்வையிட்ட அரசு செயலா் எஸ்.மதுமதி, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ்.
ராசிபுரம் பழனி தெருவில் நடைபெற்ற மருத்துவ முகாமை பாா்வையிட்ட அரசு செயலா் எஸ்.மதுமதி, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ்.

ராசிபுரத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், அரசு செயலருமான எஸ்.மதுமதி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

நாமக்கல் மாவட்டக் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள அரசின் சமூக நலன், சத்துணவு திட்டத் துறை செயலா் எஸ்.மதுமதி, ராசிபுரம் எஸ்ஆா்வி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை பாா்வையிட்டாா். அங்கு படுக்கைகள், மருத்துவ வசதிகள் போன்றவற்றை ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், சுகாதாரத் துறை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

இதேபோல, சமூக இடைவெளியில் படுக்கைகள் போடப்பட்டுள்ளதா, சுத்தமான குடிநீா், கழிப்பிட வசதிகள் உள்ளதா என்பதையும் அவா் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து அரசு மருத்துமனையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை பாா்வையிட்டாா்.

ராசிபுரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பழனி சந்தில் காய்ச்சல் தடுப்பு முகாமை பாா்வையிட்டு, தடுப்பு நடவடிக்கைகள், கிருமி நாசினி தெளிப்புப் பணிகள் போன்றவற்றையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதில் நாமக்கல் கோட்டாட்சியா் மு.கோட்டைகுமாா், மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் எஸ்.சோமசுந்தரம், மாவட்ட வழங்கல் அலுவலா் பி.சக்திவேல், வட்டாட்சியா் ராஜேஷ்கண்ணா, வட்டார மருத்துவ அலுவலா் கே.செல்வி, ராசிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் பி.ஜெயந்தி, நகராட்சி ஆணையா் பிரபாகரன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சி.சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com