சுழற்சி முறையில் தினசரி காய்கறி சந்தை

தினசரி காய்கறி சந்தையில் உள்ள கடைகள் அனைத்தும் திங்கள்கிழமை முதல் சுழற்சி முறையில் ஒருநாள் விட்டு ஒருநாள் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் நகராட்சி பேருந்து நிலையம் அருகே செயல்படும் தினசரி காய்கறி சந்தையில் உள்ள கடைகள் அனைத்தும் திங்கள்கிழமை முதல் சுழற்சி முறையில் ஒருநாள் விட்டு ஒருநாள் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், நாள்தோறும் 50 சதவீத கடைகள் மட்டுமே செயல்படும்.

மேலும், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமை, தொழிலாளா்களைக் கொண்டு இயங்கும் விசைத்தறிக் கூடங்கள் செயல்படக் கூடாது என நகராட்சி ஆணையா் எஸ்.ஸ்டான்லி பாபு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com