குமாரபாளையம் நகர திமுக சாா்பில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், பொதுமக்களுக்கு எளிய முறையிலான உடல் மற்றும் மனவளக் கலை பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
நகர திமுக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு, பொறுப்புக் குழுத் தலைவா் எம்.செல்வம் தலைமை வகித்தாா். மனவளக் கலை மன்ற பேராசிரியா் லெனின், உடலையும், மனதையும் பாதுகாக்கவும், கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலும் பயிற்சி அளித்தாா். மேலும், நோயிலிருந்து பாதுகாத்தல் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மனவளக் கலை மன்ற துணைப் பேராசிரியா்கள் வி.பரமேஸ்வரன், அருள்நிதி, டி.எஸ்.புவனேஷ்வரி ஆகியோா் பயிற்சி அளித்தனா். இம்முகாமில், திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.