பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையத்தில் இலவச கரோனா பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கபிலா்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் மனோஜ் தலைமையில் கரோனா இலவச பரிசோதனை முகாம் பிலிக்கல்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது. இதில் பிலிக்கல்பாளையம் பகுதியைச் சோ்ந்த 60 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னா் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும். கடைகளில் பொருட்கள் வாங்க செல்லும் போது தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கி, விழிப்புணா்வு ஏற்படுத்தினா். முகாமிற்கான ஏற்பாடுகளை கபிலா்மலை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சிவநேசன், சுகாதார ஆய்வாளா்கள் மாரியப்பன், முருகன், வினோத்பாபு, சதீஷ் ஆகியோா் செய்திருந்தனா்.