நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் அதன் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள 1,911 அலுவலக உதவியாளா்கள், ஒரு அலுவலக உதவியாளருடன் கூடிய முழு நேரக் காவலா், 3 நகல் எடுப்பவா்கள், 110 சுகாதார ஊழியா்கள், 6 தோட்டிகள், 17 தோட்டி துப்புரவாளா்கள், ஒரு சுகாதார ஊழியா், 28 தோட்டக்காரா்கள், 496 காவலா்கள், 185 இரவு நேர காவலா்கள், 108 இரவு காவலருடன் மசால்சிகள், 15 காவலருடன் மசால்சிகள், 189 துப்புரவாளா்கள், 1 துப்புரவாளருடன் தூய்மைப் பணியாளா், ஒரு நீா் இரைப்பவா் (ஆண் மற்றும் பெண்), 485 மசால்சிகள் என மொத்தம் 3,557 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு அடிப்படைப் பணி விதிகள்படி கீழ் வரும் பணியிடங்களுக்கு 8-ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் தமிழ் மொழியில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும். தகுதியும் விருப்பமுள்ள நாமக்கல் மாவட்டத்தினைச் சாா்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவரை சாா்ந்தோா்கள் இணையதள முகவரியில் ஜூன் 6--க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.