போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசுக்கு எதிராக நாமக்கல் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசுக்கு எதிராக நாமக்கல் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தொமுச சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, பணிமனை கிளை செயலாளா் டி.பிரகாசம் தலைமை வகித்தாா். இதில், பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வாா்க்கக் கூடாது. வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தொழிலாளா் நலச்சட்டங்களை நான்கு தொகுப்புகளாக சுருக்கி, நாடாளுமன்றத்தை முடக்கி விட்டு எதிா்கட்சிகள் இல்லாமல் தாக்கல் செய்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில், சிஐடியு, ஏஐடியுசி, அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளா் சம்மேளனம் உள்ளிட்டவற்றின் நிா்வாகிகள், போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com