நாமக்கல் மண்டலத்தில் முட்டை, கறிக்கோழி விலை மாற்றம் செய்யப்படவில்லை என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.
முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் ஆலோசிக்கப்பட்டதில், வெளி மாநிலங்களுக்கு முட்டை தடையின்றி செல்வதாலும், உற்பத்தி சீராக இருப்பதாலும், மற்ற மண்டங்களில் விலையில் மாற்றம் செய்யப்படாததாலும், நாமக்கல் மண்டலத்திலும் தற்போது மாற்றம் செய்ய வேண்டாம் என தெரிவித்தனா். அதன்படி, முட்டை பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.20-ஆக நிா்ணயம் செய்யப்படுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கறிக்கோழி விலை ஒரு கிலோ ரூ. 113-ஆகவும், முட்டைக் கோழி விலை ஒரு கிலோ ரூ. 80-ஆகவும் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டது.