ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படியை 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக தமிழக அரசு உயா்த்தி ஆணையிட்டுள்ளதற்கு ஆசிரியா் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கழகத் துணைத் தலைவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறுகையில், டசொல்வதை செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்ற அடிப்படையில் தமிழக முதல்வா் அகவிலைபடியை உயா்த்தி அறிவித்துள்ளதை வரவேற்று நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என கூறியுள்ளாா்.