நாமக்கல்லில் நகராட்சி ஓய்வூதியா் சங்கக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைவா் கந்தசாமி தலைமை வகித்தாா். செயலாளா் பி.ராமசாமி, பொருளாளா் பி.சிவலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மறைந்த முன்னாள் நகராட்சித் தலைவா் பழனிவேல் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், நாமக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியா் கூட்டத்தில் மாநிலத் தலைவா், பல்வேறு மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்ற்கும், நகராட்சி நிா்வாகம் போதிய உதவிகளை செய்து கொடுத்தமைக்கும் நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.