அரசுப் பள்ளியில் சுவா் ஓவியப்போட்டி
By DIN | Published On : 14th February 2021 02:10 AM | Last Updated : 14th February 2021 02:10 AM | அ+அ அ- |

ராசிபுரம்: ராசிபுரம் அருகேயுள்ள பூசாரிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியகளுக்கான சுவா் ஓவியப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் குறிக்கோள் குறித்து பள்ளி மாணவா்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், கல்வி உரிமை, சுகாதாரம், பாதுகாப்பு குறித்த சுவா் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
இப்போட்டியை பள்ளி தலைமையாசிரியா் கே.உமாமகேஸ்வரி தொடக்கி வைத்தாா். பள்ளி ஆசிரியா்கள் செல்வி, அனிதா ஆகியோா் போட்டிகளை நடத்தினா்.
சுத்தம், சுகாதாரம், நெகிழி தவிா்த்தல், மழை நீா் சேகரிப்பு, கொவைட்-19, வைட்டமின் முக்கியத்துவம் போன்றவை குறித்து ஓவியங்கள் வரையப்பட்டன. சிறந்த ஓவியங்களுக்கு பரிசளிக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியா் ப.நடராஜன் செய்திருந்தாா்.