புதுசத்திரம் அருகே காதலா்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டனா்.
நாமக்கல் மாவட்டம், பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜு (47). இவருக்கு 19 வயதில் மகன், 17 வயதில் மகள் உள்ளனா். இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த அவரது உறவுக்காரப் பெண்ணான சசிகலாவுடன் காதல் ஏற்பட்டது. சசிகலாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவா்களது உறவுக்கு இரு வீட்டாரும் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால் மனமுடைந்த இருவரும் ஏளூா் ஏரிக்கரையில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனா்.
இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.