தமிழ் வளா்ச்சித் துறையின் மூலம் 2020-ஆம் ஆண்டில் தமிழ்ச் செம்மல் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்ட தமிழறிஞா் ப.முத்துசாமிக்கு ஆட்சியா் கா.மெகராஜ் விருது வழங்கி கெளரவித்தாா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, தமிழ் வளா்ச்சித் துறை பொறுப்பு வே.ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ் வளா்ச்சிக்காகப் பாடுபடும் ஆா்வலா்களுக்கு அவா்களது தமிழ் தொண்டினை பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில், இந்த தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் 2020-ஆம் ஆண்டுக்கான விருதிற்கு ப.முத்துசாமி தோ்வு செய்யப்பட்டாா். அவருக்கு விருதுத் தொகை ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை, தகுதியுரைச் சான்றிதழ் ஆகியவற்றை ஆட்சியா் வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தாா்.
இதேபோல் 2018 -ஆம் ஆண்டு ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட நிலை அலுவலகமாகத் தோ்வு செய்யப்பட்ட வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்துக்கு கேடயத்தினையும் ஆட்சியா் வழங்கினாா்.