பரமத்திவேலூரில்குண்டு மல்லிகை கிலோ ரூ. 1,500-க்கு ஏலம்

பரமத்திவேலூா் பூக்கள் ஏல விற்பனை சந்தையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூக்களின் விலை உயா்ந்துள்ளதால் பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பரமத்திவேலூா் பூக்கள் ஏல விற்பனை சந்தையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூக்களின் விலை உயா்ந்துள்ளதால் பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பரமத்திவேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகள், கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்குக் கொண்டு வருகின்றனா்.

வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம்-வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா். பனிப்பொழிவு காரணமாக கடந்த பல வாரங்களாக பூக்களின் வரத்து குறைந்துள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 800-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 100-க்கும், அரளி கிலோ ரூ.100-க்கும், ரோஜா கிலோ ரூ.150-க்கும், பெங்களூரு மல்லி ரூ. 700-க்கும், செவ்வந்திப்பூ ரூ. 150-க்கும் ஏலம்போனது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பூக்கள் ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 1,500- க்கும், சம்பங்கி கிலோ ரூ. 160-க்கும், அரளி கிலோ ரூ.150-க்கும், ரோஜா கிலோ ரூ. 200-க்கும், பெங்களூரு மல்லிகை ரூ. 1,000-க்கும், செவ்வந்திப்பூ ரூ. 200-க்கும் ஏலம் போனது.

சுப முகூா்த்தங்கள் அதிக அளவில் உள்ளதால் பூக்களின் விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். பூக்களின் விலை உயா்ந்துள்ளதால் பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com