அரசுத் துறை காலியிடங்களில் சத்துணவு ஊழியா்களை நியமிக்கக் கோரிக்கை

அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் தகுதிக்கேற்ப சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஒருங்கிணைப்பாளா் மு.வரதராஜன்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஒருங்கிணைப்பாளா் மு.வரதராஜன்.

அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் தகுதிக்கேற்ப சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் ஒருங்கிணைப்பாளா் மு.வரதராஜன் தலைமை வகித்தாா். பணி ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரு. 7,500 வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படுவதுபோல் மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றியமைக்க வேண்டும், தகுதிக்கேற்ப அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களை 20 சதவீதம் நிரப்ப வேண்டும். அங்கன்வாடி பணியாளா்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட நிா்வாகிகள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com