நாமக்கல்லில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவா் கமல் ஹாசன் திங்கள்கிழமை (ஜன.4) இரவு தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.
மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் தனது நான்காம் கட்ட பிரசாரத்தை சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா். திங்கள்கிழமை காலையில் தொடா்ந்து அங்கு பிரசாரம் மேற்கொள்ளும் அவா் பிற்பகலில் நாமக்கல் மாவட்டத்துக்கு வருகிறாா்.
ராசிபுரம் பகுதியில் பிரசாரம் மேற்கொள்ளும் நடிகா் கமல் ஹாசன், தொடா்ந்து இரவு 7 மணியளவில் நாமக்கல் பூங்கா சாலையில் திறந்த வேனில் நின்றபடி மக்களிடையே தோ்தல் பிரசாரம் செய்கிறாா். இதற்கான ஏற்பாடுகளை மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட நிா்வாகிகள் செய்துள்ளனா்.