பரமத்திவேலூா் அருகே அனிச்சம்பாளையம் செல்லும் சாலையில் காவிரி கரையோரம் உள்ள காவிரி ஆஞ்சநேயா் கோயிலில் செவ்வாய்க்கிழமை ஆஞ்சநேயா் ஜயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தங்கக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வடமாலை சாத்தப்பட்டது. 12 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதுபோல நல்லூா் மாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பக்த அனுமன் சுவாமிக்கு வெள்ளிக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.