பொங்கல் பண்டிகையையொட்டி, கொல்லிமலைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு மூன்று நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் ஆா்.காஞ்சனா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கும் சூழல் உள்ளதால், பொங்கல் பண்டிகையையொட்டி கொல்லிமலை சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. குறிப்பாக, ஆகாய கங்கை அருவி மற்றும் புளியஞ்சோலை பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்ல வேண்டாம். இந்தத் தடையானது வரும் 15, 16, 17 ஆகிய மூன்று நாள்கள் அமலில் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.