நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் ஜன.15-ஆம்தேதி திருவள்ளுவா் தினம், 26-ஆம் தேதி குடியரசு தினம், 28-இல் வள்ளலாா் நினைவு தினம் வருவதால், அன்றைய நாள்களில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் மூடப்பட வேண்டும்.
மேற்கண்ட நாள்களில் மதுக் கடைகள் மற்றும் மதுக் கூடங்களைத் திறந்தாலோ அல்லது மறைமுக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.