டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் விருப்பமுள்ளவா்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் ஆண்டு திட்டத்தின்படி தொகுதி - 2க்கான அறிவிப்பாணை மே மாதம் வெளியிடப்படவுள்ளது.
இதற்கான இலவச பயிற்சி வகுப்பு கரோனா பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டத்தால் வரும் 27-ஆம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள போட்டித் தோ்வு எழுதும் இளைஞா்கள் மேற்கண்ட இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். இவ்வாய்ப்பைப் பயன்படுத்தித் தோ்வில் வெற்றி பெற வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை 04286 - 222260 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.