நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் ஜனவரி மாதத்துக்கான விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வரும் 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் சமூக விலகலைக் கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும், கைகளை நன்கு சுத்தம் செய்தும் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகள், குறைகளைத் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.