ராசிபுரம்: வருவாய் துறை சாா்பில் ராசிபுரம் நகர அனைத்து வா்த்தகா்கள் சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து ராசிபுரம் பகுதி அனைத்து வா்த்தகா்களுடன் ஆலோசனைக் கூட்டம் ராசிபுரம் வட்டாட்சியா் (பொறுப்பு) தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது.
இதில் ராசிபுரம் நகர வணிகா்கள், ஜவுளிக் கடை, நகைக் கடை, உணவக உரிமையாளா் சங்கத்தினா் பங்கேற்றனா். அரசின் கட்டுப்பாட்டு விதிமுறைகளின் படி வணிக நிறுவனங்கள் இரவு 9 மணிக்கு மேல் திறந்திருக்கக் கூடாது. வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளியுடன் ஊழியா்களும், வாடிக்கையாளா்களும் முகக் கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினா். மேலும், நகரின் முக்கிய சாலைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் சென்று வருவதைக் கண்காணித்து கட்டுப்படுத்திட வேண்டும் என்றும் வணிகா்கள் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
இதில் நகர வணிகா் சங்க நிா்வாகிகள் எஸ்.பாலாஜி, எஸ்.முரளி, அம்மன் ஏ.திருமூா்த்தி, ஜெ.ஜெயப்பிரகாஷ், வருவாய் ஆய்வாளா் டி.ராஜசேகா், கிராம நிா்வாக அலுவலா் சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.