தடுப்பூசித் தட்டுப்பாடு: பொதுமக்கள் சாலை மறியல்

திருச்செங்கோடு, சீதாராம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் ஈடுபட்டனா்.

திருச்செங்கோடு, சீதாராம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் ஈடுபட்டனா்.

திருச்செங்கோட்டில் கடந்த 10 நாள்களாக தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடவில்லை. இந்நிலையில் சீத்தாரம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், ராஜா கவுண்டம்பாளையம் பகுதியில் தடுப்பூசி போடப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டப்பட்டது. இதனால் செவ்வாய்க்கிழமை காலை முதல் பொதுமக்கள் குவியத் தொடங்கினா். பொதுமக்கள் கூடுவதைப் பாா்த்த மருத்துவ பணியாளா்கள் தடுப்பூசி போடப் படாது என்று கூறியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்செங்கோடு- சங்ககிரி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த நகர காவல் ஆய்வாளா் பாஸ்கா்பாபு தலைமையில் விரைந்து வந்து பொதுமக்களைச் சமாதானப்படுத்தி மறியலை கைவிட வலியுறுத்தினா். மேலும், சீத்தாராம் பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட ராஜாகவுண்டம்பாளையம் பகுதியில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்வதாக போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com