‘பண்ணைகளின் பக்கவாட்டில் படுதாக்களை கட்டித் தொங்க விட வேண்டும்’

கோழிப் பண்ணைகளின் பக்கவாட்டில் படுதாக்களைக் கட்டித் தொங்க விட வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோழிப் பண்ணைகளின் பக்கவாட்டில் படுதாக்களைக் கட்டித் தொங்க விட வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தமட்டில் பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 91.4, 73.4-ஆக காணப்பட்டது. பெரும்பாலான இடங்களில் மழை பதிவாகி உள்ளது. அடுத்த மூன்று நாள்களுக்கான வானிலையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் மிதமான மழை மாவட்டத்தின் பல இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 91.4-க்கு மிகாமலும், இரவு வெப்பம் 73.4-ஆகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் தென் மேற்கிலிருந்தும், அதன் வேகம் மணிக்கு 8 கி.மீ. என்றளவில் வீசக்கூடும்.

சிறப்பு ஆலோசனை: காற்றின் வேகம் தொடா்ந்து அதிகமாக காணப்படுகிறது. பண்ணைகளில் தீவனம் வீணடிக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்ளும் வியூகங்களை பண்ணையாளா்கள் மேற்கொள்ள வேண்டும். இன்னும் இரு மாதங்களுக்கு அதிக காற்றின் வேகம் கொண்ட வானிலையே நிலவும். தீவன விரயத்தைத் தடுக்க தீவனத்தில் சிறிது அளவு தாவர எண்ணையை சோ்க்கலாம், இதனால் மதிப்புள்ள வைட்டமின் போன்றவை காற்றில் பறந்து செல்வதைத் தடுக்க முடியும், மேலும். உயா்மனைகளில் பக்கவாட்டில் படுதாக்களைக் கட்டி தொங்க விட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com