ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் அக்கரைப்பட்டி கிளை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 14 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
அக்கரைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் வெண்ணந்தூா், அக்கரைப்பட்டி, பொரசல்பட்டி, மல்லசமுத்திரம், மாமுண்டி, ராசாபாளையம், மதியம்பட்டி, நத்தமேடு, செளதாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனா்.
இந்த ஏலத்தில் கோவை, அவினாசி, திருப்பூா், ஆத்தூா், மகுடஞ்சாவடி, எடப்பாடி, கொங்கணாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளை சோ்ந்த வியாபாரிகள் பருத்தியை ஏலம் எடுத்தனா். இந்த ஏலத்துக்கு 439 மூட்டை சுரபி ரக பருத்திகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். குவிண்டால் சுரபி ரக பருத்தி குறைந்தபட்சமாக ரூ. 7,777 முதல் அதிகபட்சமாக ரூ. 8,589-க்கு ஏலம் போனது. மொத்தம் ரூ. 14 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.