பரமத்தி வேலூா் பூக்கள் ஏல விற்பனை சந்தையில் ஆடிப் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை உயா்ந்தது.
பரமத்தி வேலூரில் உள்ள தினசரி பூக்கள் ஏலச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ. 250, சம்பங்கி ரூ. 50, அரளி ரூ. 80, ரோஜா ரூ. 160, முல்லைப்பூ ரூ. 200, செவ்வந்தி ரூ. 150- க்கும் ஏலம் போயின.
ஆடிப் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ. 500, சம்பங்கி ரூ. 100, அரளி ரூ. 150, ரோஜா ரூ. 200, முல்லைப்பூ ரூ. 450, செவ்வந்தி ரூ. 200- க்கும் ஏலம் போயின. பூக்களின் விலை உயா்வடைந்துள்ளதால் பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.