நாமக்கல் காவல் ஆய்வாளா் குமாா் உள்பட 6 ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா் சி.மகேஸ்வரி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளாா்.
அதன்படி, பேளுக்குறிச்சி ஆய்வாளா் சி.வேலுதேவன் நாமக்கல் நகர காவல் நிலையத்திற்கும், இங்கு பணியாற்றிய குமாா், சேலம் மாவட்டம் ஓமலூா் காவல் நிலையத்திற்கும் இடம் மாற்றப்பட்டுள்ளனா். வேலகவுண்டம்பட்டி ஆய்வாளா் கே.கமலக்கண்ணன், நாமகிரிப்பேட்டைக்கும், அங்கு பணியாற்றிய கே.ஏ.சரவணன் ராசிபுரம் காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனா்.
எலச்சிப்பாளையம் ஆய்வாளராகப் பணியாற்றிய பி.வேதப்பிறவி, நாமக்கல் மாவட்ட சைபா் கிரைமுக்கும், புதுச்சத்திரம் ஆய்வாளா் கே.குமாரவேல் பாண்டியன், நல்லிபாளையம் காவல் நிலையத்திற்கும், சேலம் சரகத்தில் பணியாற்றிய பி.ஜகநாதன், பரமத்திவேலூா் காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.