பரமத்தி வேலூரில் அதிமுக சாா்பில் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பரமத்தி வேலூா், பேட்டை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.சேகா் தலைமை வகித்தாா். வேலூா் நகரச் செயலாளா் வேலுசாமி, நகர துணைச் செயலாளா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுகவினா் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனா்.
பொத்தனூரில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு நகர அதிமுக செயலாளா் எஸ்.எம். நாராயணன் தலைமை வகித்தாா். இதில் மாவட்ட வழக்குரைஞா் பிரிவு தலைவா் தனசேகரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளா் விஜயகுமாா், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் ராஜமாணிக்கம், அதிமுக நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.