நாமக்கல் மாவட்ட சேவா பாரதி அமைப்பு சாா்பில் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சை பிரிவில் பயன்படுத்தும் வகையில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள், பரிசோதனைக் கருவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு சேவா பாரதியின் நாமக்கல் மாவட்டம் சாா்பில் பல்வேறு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்த நாமக்கல் மாவட்ட சேவா பாரதி அமைப்பின் சாா்பில் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, பிள்ளாநல்லூா் அரசு மருத்துவமனைகளுக்கு 5 ஆக்சிஜன் செறிவூட்டிகளும், ஸ்டெப்லைசா், ஆக்சிஜன் பரிசோதனைக் கருவிகளும் வழங்கப்பட்டன.
நாமக்கல் மாவட்ட சேவா பாரதி அமைப்பின் தலைவா் எஸ்.சந்திரசேகரன் இந்தக் கருவிகளை தலைமை மருத்துவ அலுவலா் கலைச்செல்வி, டாக்டா் எஸ்.ரமேஷ் ஆகியோரிடம் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் வி.ராமதாஸ், நாமக்கல் நகர விஎச்பி. தலைவா் ராமசாமி, பள்ளி முதல்வா் கிருஷ்ணமூா்த்தி, காா்த்திகேயன், ஆனந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.