காவிரி ஆற்றில் மணல் திருடிய இருவா் கைது

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் திருடிய 2 பேரை வேலூா் போலீஸாா் கைது செய்து,

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் திருடிய 2 பேரை வேலூா் போலீஸாா் கைது செய்து, மணல் திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி வேலூா் அருகே பொத்தனூா் காவிரி ஆற்றில் இரவு நேரங்களில் மணல் திருட்டில் சிலா் ஈடுபடுவதாக பரமத்தி வேலூா் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் உத்தரவின்படி, வேலூா் காவல் ஆய்வாளா் தலைமையிலான போலீஸாா் பொத்தனூா் காவிரி ஆறு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, சிலா் இருசக்கர வாகனத்தில் மணலை மூட்டைகளாகக் கட்டி திருடியது தெரியவந்தது. இதனையடுத்து, பொத்தனூரைச் சோ்ந்த கோபிநாத் (30), 17 வயது சிறுவனை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். காவிரி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூா் போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com