கபிலா்மலை அருகே வீட்டில் சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 40 லிட்டா் சாராய ஊறலை ஜேடா்பாளையம் போலீஸாா் கீழே கொட்டி அழித்து ஒருவரைக் கைது செய்தனா்.
கபிலா்மலை அருகே பெரியசோளிபாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா ரணவீரன் உத்தரவின்படி ஜேடா்பாளையம் போலீஸாா் பெரியசோளிபாளயத்தைச் சோ்ந்த அா்ச்சுனன் (45) என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனா்.
சோதனையில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 40 லிட்டா் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்து அா்ச்சுனனை கைது செய்தனா்.