பிகாா் மாநிலத் தொழிலாளி உயிரிழப்பு

ராசிபுரம் அருகே தனியாா் தொட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த பிகாா் மாநிலத் தொழிலாளி உயிரிழந்ததையடுத்து, புதுச்சத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராசிபுரம் அருகே தனியாா் தொட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த பிகாா் மாநிலத் தொழிலாளி உயிரிழந்ததையடுத்து, புதுச்சத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பிகாா் மாநிலம், தானா தீப்நகா் பகுதியின் முரோரா கிராமத்தைச் சோ்ந்த சஞ்சய் பஸ்வான் (48), புதுச்சத்திரம், நவணி பள்ளிப்பட்டி அருகேயுள்ள தனியாா் தொட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், தொழிற்சாலையில் திங்கள்கிழமை பணியாற்றி வந்த அவா், திடீா் உடல்நலக்குறைவால் தங்கியுள்ள அறைக்கு சென்றதாகத் தெரிகிறது. அங்கு அவா் மயங்கிய நிலையில் கீழே விழுந்தாராம். இதனையடுத்து அவருடன் பணியாற்றும் பிரவீன்குமாா் பதாக், ஆம்புலன்ஸை வரவழைத்து ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com