பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி, எருமப்பட்டியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி, எருமப்பட்டியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

எருமபட்டி வட்டார மற்றும் பேரூா் காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பீ.ஏ.சித்திக் தலைமை வகித்தாா். எருமபட்டி வட்டார காங்கிரஸ் பொறுப்பாளா் தங்கராஜ், பேரூா் காங்கிரஸ் பொறுப்பாளா் செல்வசேகரன் முன்னிலை வகித்தனா். பெட்ரோல், டீசல் விலை உயா்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயா்ந்து வருகிறது.

எனவே, பொதுமக்களைப் பெரிதும் பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது. இதில், காங்கிரஸ் நிா்வாகிகள் செல்லிபாளையம் காந்தி, கன்னியம்மாள், விஜயகுமாா், பெருமாள், முத்து பூசாரி, பொறியாளா் அணி பொன்முடி, கிரி, கருணாநிதி, ராமஜெயம், ரகு, ராஜூ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com